Tuesday, July 24, 2012

தயாரிப்பாளர் அவதாரமெடுக்கும் இயக்குன தோழர்கள் பார்வைக்கு.


சினிமாவும் ,சின்னத்திரையும் ஒருசேர ஒரு மாற்றத்திற்கு ஆட்பட்டு வருகிறது. அது பெரியதிரையிலும், சின்னத்திரையிலும், தயாரிப்பாளர்கள் எனும் தனித்தன்மை வாய்ந்த ஒரு பிரிவினர் மறைந்து, இயக்குனராக நுழைந்து,வெற்றி பெற்று தயாரிப்பாளர்களாக வடிவம் பெற்றவர்கள் வந்து விட்டனர்.

நானும் கூட இந்த மாற்றம், ஒரு நல்ல படைப்பாளியினை இன்னொரு நல்ல படைப்பாளி அடையாளம் காண்பது எளிது என்கிற அளவில், நிறைய புது படைப்பாளிகள் உருவாகும் நிலைஏற்படும் என கருதினேன். அது ஒரு வகையில் உண்மை என்று கூட நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டெக்னிஷியன் என்கிற தொழில்நுட்ப வல்லுநர் பிரிவுகளான இயக்கம், ஒளிப்பதிவு, போன்றவர்களை தாண்டி இருக்கும் ஊழியர்கள் சம்பள நிலை இன்றைக்கு ஆரோக்கியமாக இல்லை என்பதாக அறிகிறேன்.

அதற்கு காரணம், தொழில்முறை தயாரிப்பாளர்கள் எல்லாவற்றிலும் தாரளமாக இருபது போல், இந்த ஊழியர்கள் சம்பள நிலையிலும் இருந்து விடுகிறார்கள், இயக்குன தயாரிப்பாளர்கள், பட,மற்றும் எபிசோடு தயாரிப்பு செலவினை குறைக்கும் நோக்கு என்று இவர்கள் தொழிலாளர்கள் செலவினத்தை குறைக்க முற்படுகிறார்கள்.

இதனை தான் நகைச்சுவையாக ஒரு இயக்குனரை வைத்து குறுந்தகவல் சுற்றில் வந்தது. அது எப்படி ...... சார், நீங்கள் படம் இயக்கம் போது தயாரிப்பாளரிடம் இது வேண்டும் அது வேண்டும் என, படம் பிரமாண்டத்தை கூட வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, நீங்கள் தயாரிக்கும் படத்தில் மட்டும் நாயகன்,நாயகியை அழுக்கு துணி அணிந்து இரண்டு தெருக்களில் ஓடவிட்டு,படம் எடுக்குறீர்கள்?, என்பதுதான் அது.

அந்த நாளில் சினிமா படபிடிப்பு தளமென்றால் மிக சிறப்பு உணவு தான், எல்லா தொழிலாளர்களும் ஒரு சேர தரமான உணவு உண்ணும் வாய்ப்பு.கிடைத்தது.இன்று இந்த புது தயாரிப்பாளர்கள் கவனம் இந்த உணவு எனப்படும், புரோடக்ட்சன் செலவு பக்கம் திரும்பி,கீழ்நிலை தொழிலாளர்கள் நன்று உணவு அருந்தும் வாய்ப்பில் மண் அள்ளி போட்டு உள்ளது.

தானத்தில் சிறந்தது அன்னதானம், அன்னத்தில் கை வைக்கும் இந்த புது அவதார தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment