Monday, July 16, 2012

மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்களின் முதல் ஒலி  -----  நடிகர் அமீர் கான் எதிரொலி
இன்றைய பரபரப்பான செய்தி, இந்தி திரைப்பட நடிகர் அமீர் கான் இந்திய பிரதமரிடம் , மனிதனே மனித கழிவுகளை அகற்றுவதை ஒழிக்க வேண்டும் என கோரிக்கை என்பது தான்.நல்ல மனிதநேயமிக்க எண்ணம் தான் அணைத்து ஊடகங்களும் பாராட்டுகின்றன. அமீர் கான் இப்போது அவர்களுக்கு மாபெரும் மக்கள் நல தொண்டர். அவர் அப்படி இருப்பதில் நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால் , மனித கழிவினை மனிதனே அள்ளும் அவலத்தை எதிர்த்து ஒவ்வொரு ஊரிலும்,  ஒவ்வொரு கிராமத்திலும் , பட்டி தொட்டிகளிலும் இவற்றையெல்லாம் தாண்டி இந்த நாடு அனுதினமும் நிம்மதி பெருமூச்சு விடும் சுவாசத்தின் அடிப்படையாய் இருக்கும் உழைக்கும் மக்களின் உறைவிடங்களான சேரிகளிலும் தொடர்ந்து ஒலித்து வந்ததே, அதை யாரும் மறுக்க முடியுமா?.  

  "தொடர்வண்டித் துறையில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை தேசத்திற்கே பெருத்த அவமானம்."
"21ம் நூற்றாண்டில் கூட தொடர்வண்டித் துறையில் துப்புரவு தொழிலாளர்கள் மனிதகழிவுகளை கையால் அகற்றித் தூய்மை செய்யும் நிலை உள்ளது. மனிதகழிவுகளை அகற்றித் தூய்மை செய்ய அரசு முறையான இயந்திர பொறிகளை வழங்க வேண்டும்".......என 8.07.2009 நாடாளுமன்றத்தில் தொடர்வண்டித் துறையின் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்கள் உரையாற்றினார்கள்.
இன்று மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் குரலை அப்படியே எதிரொலித்து இருக்கிறார் நடிகர் அமீர் கான், இது உடனே எல்லோர் காதுகளிலும் ஒலிக்கிறது . அமீர் கானுக்கு , மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக்  அளித்துள்ள பதில் என்ன தெரியுமா ?. இது சமந்தமான சட்ட முன்வடிவு அணைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டு தற்போது வரும் கூட தொடரிலேயே   "மனித கழிவினை மனிதனே அள்ளும் அவல தடை" மசோதா கொண்டுவரப்படும் என்பது தான். ஆக, முகுல் வாஸ்னிக் அவர்களின் பதில் உணர்த்தும் உண்மை ,ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திறம்பட மேன்மையாளர் எழுச்சித்தமிழர் செயலாற்றியதின் விளைவு அவரது மனிதநேய மான்பிற்கு வெற்றியினை தேடி தந்து இருக்கிறது. 
முதல் ஒலி இன்றி எதிரொலி தோன்றாது. அந்த வகையில் இன்று அமீர் கானின் எதிரொலியினை இன்று சில ஊடகங்கள் தூக்கி பிடித்தாலும் மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் குரல் தான் முதற்குரல் என்பதை வரலாறு மறக்காது.மேன்மையாளர் எழுச்சித்தமிழர் அவர்களின் முதல் ஒலி இன்றி இது சாத்தியம் இல்லை என்பதை நாமும் நாடும் நிச்சயம் அறிவோம்.தலைவர் அவர்களின் மாற்றுமொரு சமூக பார்வை வேண்டுகோள் இன்று நிறைவேறும் நிலை உருவாகியுள்ளதற்கு அவரின் தம்பியாய் பெருமிதம் கொள்வோம்.

No comments:

Post a Comment