Thursday, March 11, 2010

போக்குவரத்து அறிவும் பொது மக்களும்

சென்னையில் மக்கள் சாலையில் நடத்தும் கொடுமைகளுக்கு அளவே இல்லாமல் போயிற்று. அரசாங்கம் சரியாக செயல்படவேண்டும் என்றும் , வாழ்வின் அணைத்து தேவைகளும் முறையாக பெற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கும் மக்கள் பொது இடங்களிலும் சாலையிலும் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதில் மட்டும் விலகி நிற்கின்றனர். மேலை நாடுகளில் போக்குவரத்தும் , சாலைகளும் சிறப்புற இருபதற்கு அங்கு இருக்கும் அரசு காரணம் அல்ல மக்கள் தன காரணம் என்பதை உணர வேண்டும். இதில் கொடுமை என்னவென்றால் மேலை நாடுகள் எல்லாம் சென்று திரும்பியவர்கள் குட மறுபடியும் நம் தாய் நாடு வந்த பின் இங்கு உள்ளவர்கள் போலவே விதிகளை மேரி நடக்கின்றனர். தனி மனித ஒழுக்கம் கடைபிடித்தால் மட்டுமே சமூக ஒழுக்கம் வளரும் என்பதை நாம் உணர்வோம். இருக்கும் விதிகளை கடை பிடிப்போம் இந்திய நாட்டின் விதியினை மாற்றுவோம்.

No comments:

Post a Comment